டிரம்ப் இன்க் நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோ நாணயம், அதாவது WLFI டோக்கன், கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது.

டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்த வாரம் முன்னணி பரிவர்த்தனை தளங்களான பைனான்ஸ் (Binance) மற்றும் காயின்பேஸ் (Coinbase) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட இந்த டோக்கன், அதன் வெளியீட்டு விலையை விட சுமார் 25 சதவீதம் குறைவாகவே வர்த்தகமாகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் $5.4 பில்லியனாக உள்ளது.

ஆரம்பத்தில் டோக்கன்களை வைத்திருந்தவர்கள் லாபம் ஈட்டுவதால், முதல் நாளில் அவை சரிவது பொதுவானது, இருப்பினும் இந்த உயர்-பிரபலமான டோக்கனின் அறிமுகத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல் இன்க்., எரிக் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது, இது WLFI டோக்கனை வெளியிட்ட பரவலாக்கப்பட்ட நிதி நிறுவனம் ஆகும்.

வெளியீட்டிற்கு கொஞ்ச நேரம் முன்பு, நிறுவனம் டிரம்ப் இன்க் நிறுவனம் 25 பில்லியன் டோக்கன்கள் புழக்கத்தில் இருக்கும் என்று அறிவித்தது. இது பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த சுமார் 5 பில்லியனை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாகும். மொத்தமுள்ள 100 பில்லியன் டோக்கன்களில் பெரும்பாலானவை இன்னும் வர்த்தகம் செய்ய முடியாததாகவும், அதில் நிறைய பங்கு அதன் நிறுவனர்களே வைத்துஇருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில இணையத்தள தகவல்களின்படி , ட்ரம்ப் குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 20 பில்லியனுக்கும் அதிகமான WLFI டோக்கன்களை கட்டுப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது