இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு செய்துள்ள நிலையில்,  அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தேசிய நெடுஞ்​சாலை மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்த சகஜமாக நடைபெறும் வகையில் இரு அமைப்புகளும் ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக,  கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. சுமார் 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.  கடந்த இரண்டரை ஆண்​டு​களுக்​கும் மேலாக மணிப்​பூரில் வன்​முறை நீடித்து வரு​கிறது. பலரும் இன்றளவும் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக,  மணிப்பூர் – நாகாலாந்து இடையே மிக முக்கியமான இணைப்பாக உள்ள என்எச்-2 தேசிய நெடுஞ்சாலை கடந்த 2023 முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும். இதன்மூலம், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள் சற்றே குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  அதுபோல இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும். இதன்மூலம், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரங்கள் சற்றே குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது.

முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது கவனம் பெறுகிறது.

வன்முறை நடைபெற்று வந்த மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி செல்லாத நிலையில், அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வந்தன. இந்த நிலையில், வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி மணிப்​பூர் மாநிலத்​துக்கு செல்ல இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இந்த சூழலில் குகி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான ஐக்​கிய மக்கள் முன்​னணி ஆகிய​வற்​றின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம்  வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மணிப்​பூரில் குகி சமு​தாயத்தின் தலைமை அமைப்​பான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்தை சேர்ந்த நிர்​வாக அமைப்​பான ஐக்​கிய மக்​கள் முன்​னணி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் கடந்த சில நாட்​களாக டெல்​லி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

இதன்​படி தேசிய நெடுஞ்​சாலை 2-ஐ திறக்க குகி சோ கவுன்​சில் ஒப்​புக் கொண்​டிருக்​கிறது. இதன்​மூலம் மணிப்​பூரில் தடையற்ற வர்த்தக போக்​கு​வரத்து தொடங்​கும். தேசிய நெடுஞ்​சாலை 2-ல் பணி​யாற்​றும் பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு குகி சோ கவுன்​சில் முழு ஒத்​துழைப்பு வழங்​கும். குகி சோ கவுன்​சில், ஐக்​கிய மக்​கள் முன்​னணி, மத்​திய அரசு இடையே முத்​தரப்பு அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதன்​படி மணிப்​பூரில் அமை​தியை நிலை நாட்ட அனைத்து தரப்​பினரும் உறுதி அளித்​துள்​ளனர்.

கிளர்ச்​சிக் குழுக்​களிடம் இருக்​கும் ஆயுதங்​களை அரு​கில் உள்ள சிஆர்​பிஎப், பிஎஸ்​எப் முகாம்​களில் ஒப்​படைக்க உத்​தர​விடப்​பட்டு உள்​ளது. மணிப்​பூரில் சில வெளி​நாட்​டினர் ஊடுருவி சட்​டம் ஒழுங்கை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​பட்டு வரு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். கிளர்ச்​சிக் குழுக்​களின் முகாம்​கள் மூடப்​படும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்டு உள்​ளது.