இங்கிலாந்தின் முதல் பெண் மற்றும் லெஸ்பியன் பேராயராக ரெவ் செர்ரி வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோன்மவுத் பிஷப், 66 வயதான ரெவ் செர்ரி வான், வேல்ஸின் புதிய பேராயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பொறுப்பை வகிக்கும் 15வது நபர் என்பதோடு, அவர் முதல் பெண்மணி மற்றும் மதகுருமார்களின் முதல் பாலினமற்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நியமனம் இங்கிலாந்து திருச்சபையிலும், சமீபத்தில் நிறுவப்பட்ட வேல்ஸ் தேவாலயத்திலும் பல நூற்றாண்டுகளாக நிலவும் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது, அங்கு பேராயர் பொறுப்பு எப்போதும் பாலின ஆண்களுக்கே வழங்கப்படுகிறது.

சர்ச்சின் வலைத்தளத்தில் உள்ள பேராயர் செர்ரியின் வாழ்க்கை வரலாறு, அவர் தனது கூட்டாளியான வெண்டி மற்றும் அவர்களின் இரண்டு நாய்களுடன் வாழ்வதாக விவரிக்கிறது.

வேல்ஸ் திருச்சபையின் பாங்கூர் கதீட்ரலில் “பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் பெண்களுடன் உல்லாசம்” ஆகிய கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கடந்த சில மாதங்களாக சர்ச்சை எழுந்த நிலையில் “விபச்சாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது” என்று ஆயர் ஆண்ட்ரூ ஜான் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மூன்றரை ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய ஆயர் ஆண்ட்ரூ ஜான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக ரெவ் செர்ரி வான் வேல்ஸ் திருச்சபையின் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.