அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் பதினேழு குடிவரவு நீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்துள்ளது. நாட்டில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது துரிதப்படுத்தப்பட்ட நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நீதிபதிகள் மற்றும் பிற நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டமைப்பு, வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளும், திங்கட்கிழமை மேலும் இரண்டு நீதிபதிகளும் காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா, இல்லினாய்ஸ், லூசியானா, மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூயார்க், ஓஹியோ, டெக்சாஸ், உட்டா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாநில நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் 800 குடிவரவு நீதிபதிகளை அங்கீகரித்த போதிலும், குடிவரவு நீதிபதிகள் காரணமின்றி பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். இது மூர்க்கத்தனமானது மற்றும் பொது நலனுக்கு எதிரானது என்று தொழிற்சங்கத்தின் தலைவர் மாட் பிக்ஸ் கூறினார்.

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளது, மே மாதத்திலிருந்து ஏராளமான சட்டவிரோத குடியேறிகளை தடுத்து வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

தற்போது, குடிவரவு நீதிமன்ற நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, நீதிமன்றங்களை அணுகும் சட்டவிரோத குடியேறிகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.