ம்பால்

ன்று மணிப்பூரில் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

பா.ஜனதா ஆட்சி நடைபெறும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள்.  வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

சிறிது சிறிதாக மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அங்கு டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 7 ஆம் தேதி மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்ட் 12 பேர் காயமடைந்தனர். எனவே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு  ம்ணிபுர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்தோடு 10 ஆம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் மாணவர்கள் போரட்டம் எதிரொலியாக கடந்த 11ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் தொடந்து மூடப்பட்டிருந்தது தற்போது மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

Today, Manipur, Educational institutions, opened,