டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை  அங்கு பெய்த மழையால், ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த  நிகழ்வுக்கு தலைகுனிந்த மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி பகிரங்கமாக  மன்னிப்பு கோரியுள்ளார்.

மகாராஷ்டிரா சிந்துதுர்க்கில்  தான் திறந்து வைத்த சிவாஜி சிலை இடிந்ததால், மனதளவில் காயம் அடைந்த மகாராஷ்டிர மக்களிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மால்வானில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,  “சத்ரபதி சிவாஜி மகாராஜை தங்கள் தெய்வமாக கருதி வருகின்றனர். தற்போது இந்த சிலை இடிந்ததால்,  மிகவும் புண்பட்டவர்களிடம், நான் தலை வணங்கி  மன்னிப்பு கேட்கிறேன்.  எங்கள் மதிப்புகள் வேறு. எங்களைப் பொறுத்தவரை, நம் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும்,  “சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது நமக்கு வெறும் பெயர் அல்ல. இன்று நான் என் கடவுள் சத்ரபதி சிவாஜி மகராஜிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன். எங்களின் மதிப்புகள் வேறு, பாரத அன்னையின் மகனான மகனை அவமதிக்கும் மற்றும் அவமதிக்கும் நபர்கள் நாங்கள் அல்ல. மேலும் அவரது “மதிப்புகள்” வேறுபட்டவை என்றும் கூறினார்.

இந்த மண்ணில் வீர் சாவர்க்கரை விமர்சித்தவர்கள், அதற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை, நீதிமன்றத்திற்குச் சென்று போராடத் தயாராக இருக்கிறார்கள்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வத்வான் துறைமுகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் 76,000 கோடி ரூபாய். இந்நிகழ்வின் போது சுமார் 1,560 கோடி ரூபாய் மதிப்பிலான 218 மீன்பிடித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

“கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை புனரமைக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முடிவுகளை எடுத்து வருவதாகவும், மால்வான் பகுதியில் சிலை இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.