மேற்கு இந்தியத் தீவுகள்

சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே.   அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும் புகழ் பெற்றுள்ளனர் என்பதும் நாம் நன்கு அறிந்த ஒன்றாகும்.   இந்திய வம்சாவளியினரான இஷ் சோதி, ரவி, பொபாரா ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம் ஆவார்கள்.  இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளி 5 கிரிக்கெட் வீரர்களில் ஏற்க்னவே இருவரைப் பற்றி பார்த்துள்ளோம். மீதமுள்ள மூவரை இந்த பகுதியில் காண்போம்.

ராம்நரேஷ் சர்வான்

இந்த 2000 ஆம் வருடத்தின் முதல் பத்தாண்டுகளில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களில் விளையாடி முன்னணி வீரர் என்னும் புகழை ராம்நரேஷ் சர்வான் பெற்றுள்ளார்.  முதலில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய போது மிகவும் துயருற்ற அவர் பிறகு வெளிநாடுகளில் பல  போட்டிகளில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் முன்னேறியவர் ஆவார்.

இவரும் இந்திய கயானிய இன குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  தற்போது இவர் டிரின்பாங்கோ நைட் ரைடர் அணியில் விளையாடி வருகிறார்.  பிரிட்ஜ்டவுலில் 2009 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் 291 ரன்கள் அடித்துள்ளார்.  அவர் சராஸ்ரீயாக டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.  அதைத் தவிர டி 20 போட்டிகளிலும் நன்கு விளையாடி உள்ளார்.

சிவநரேன் சந்தர்பால்

சந்தர்பால் விளையாடும் போது அவருடைய திறமை ஓரளவு அதிகம் வெளிப்படவில்லை என்பதே உண்மையாகும்.  ஏன் என்றால் அவருடைய கிரிக்கெட் விளையாட்டுக்கள் மக்களைக் கவர்வதில் அவருடைய சக வீரர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.   இந்தோ கயனீஸ் தம்பதிகளான காமராஜ் மற்றும் உமா ஆகியோரின் மகனான சந்தர்பால் தனது 19 ஆம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.  ஆயினும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட எடுக்கவில்லை.

அவரது ஆரம்பக் கால சிக்கல்களுக்குப் பிறகு அவர் சிறிது சிறிதாக முன்னேறி ஒரு வலுவான வீரர் ஆனார்.  இவர் டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுக்காக 11000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.  மேலும் தனிப்பட்ட விளையாட்டின் மூலம் பிரபலம் ஆனார். இதுவரை அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 250க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சராசரியாக 40 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

சுனில் நரேன்

இந்திய மக்களால் போற்றப்படும் சில வெளிநாட்டு வீரர்களில் ஒருவரான சுனில் நரேன் தனது ஐபில் சாதனைகளால் கிரிக்கெட் உலகில் ஒரு புயலை உண்டாக்கினார்.  இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடரில் இருமுறை சாதனை செய்துள்ளார்.  அவரது ரன் ரேட்டுகள் மூலம் சுழற்பந்து வீச்சாளர்களைக் குறுகிய நேரத்தில் வீழ்த்த முடியும் எனக் கூறப்படுவதை மாற்றி ஒரு பேசு பொருளாக இருந்தார்.  இவர் டிரினிடாட் நகரில் இந்தோ கயனீஸ் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்தார்

அவரது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்தியா தனது இரண்டாம் வீடு எனத் தெரிவித்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமாக தென்பட்ட நிலையில் அவர் தனது நிலை குறித்து தனது பேச்சினால் தெளிவு படுத்தி அணியின் முக்கிய இடத்தை பெற்றார்.  அவரது சக தோழர்களை விட இவர் உலகத்தரம் வாய்ந்த வீரராக இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறார்.

[youtube-feed feed=1]