1990 களில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நக்சலைட் தலைவர் ரவிசங்கர் என்ற ராவணா.

இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ள படம் – விராத பருவம்.

நக்சலைட் தலைவராக ராணா நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ப்ரியாமணி, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வேணு உடுகுலா, டைரக்டு செய்துள்ளார்.

தெலுங்கு தவிர தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘விராதபருவம்’ ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகிறது.

– பா. பாரதி