Skip to content
  • Tue. Jul 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது! அமைச்சர் ஜெயக்குமார்

Sep 5, 2020

செனனை: மதுரையில் எம்ஜிஆர் போல சித்தரிக்கப்பட்ட நடிகர் விஜயின் போஸ்டர்கள் ஒட்டப்பட் டுள்ளது. இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில்,  எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

இன்று  வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளையொட்டி, இன்று அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள், மதுரை போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,  எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது. அவரது ரசிகர்கள் ஆசையின் மிகுதியால் இதுபோன்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழக்ததில், எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை வேறு எவராலும்  முடியாது என்றார்.

மேலும், தமிழகத்தில் அரசியல் கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என கூறி மாநில பாஜக தலைவர் முருகனுக்கு உரிமையில்லை, அவர் எங்களுக்கு  கட்டளையிட முடியாது என்றும், கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம் என்றார்.

மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்றும் கூறினார்.

ராமநாதபுரம் எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு,  அரசின் நிர்வாக காரணங்களால்தான ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார், இதற்கு பாஜக அழுத்தம் கிடையாது என்றவர், அவர்களால்  எங்களை ஒருபோதும் நிர்பந்திக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.

சசிகலா விடுதலை மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு,  சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை,  சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக 3 சீருடைகள்! செங்கோட்டையன்
கிசான் திட்ட முறைகேடு: திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் முறைகேடு…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer