மும்பை

டும் கூட்ட நெரிசல் காரணமாக மும்பை ரயில் நிலையத்தி சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மொத்தம் 22 பெட்டிகளுடன் முன்பதிவு இல்லா ரயிலாக இயக்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதா கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிக்க பாந்த்ரா ரெயில் நிலையத்தில் கூட்டம் கூடுகிறது.

நேற்று காலை 5.10 மணிக்கு பாந்த்ராவில் இருந்து இந்த ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை 3 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவியத் தொடங்கினர். ரயில் வருவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடைமேடையில் ரயில் நுழையும் போதே அதில் ஏறுவதற்காக பயணிகள் முந்தியடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றனர்.இதனா அங்கு ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்து. சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். டு சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

ரயில்வே காவல்துறையினர் இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். காயமடிந்தவார்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவருக்கு முதுகுத் தண்டிலும், மற்றொரு நபருக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது., இரு நபர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.