டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம் என்று கூறியுள்ளார்.
இந்தியா குடியரசு நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக 1950 ஜனவரி 25ம் தேதி தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 16வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், ‘‘வாக்களிப்பு என்பது வெறும் அரசியல் வெளிப்பாடு மட்டுமல்ல, அது தேர்தல்களின் ஜனநாயக செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. நாட்டில் தேர்தல் முறையை வலுப்படுத்த வசீகரம், பாரபட்சம், தவறான தகவல்களை தவிர்த்து இந்தியர்கள் தெளிவோடு வாக்குரிமையை பயன்படுத்துவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவின் தேர்தல் பயணம் அதன் ஜனநாயகத்தின் வலிமை, மீள்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கு குறிப்பிடத்தக்க சான்றாக இருந்து வருகிறது. பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம், நம்பகமான ஜனநாயக செயல்முறைகளுக்கு மக்கள் பங்களிக்கின்றனர்’.
வறுமையால் அதிகரிக்கும் இடப்பெயர்வு; துயரங்களோடு சாலையோரம் வசிக்கும் மக்கள் 7.8 லட்சம் பேர்: மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வாழ்விடங்கள்’ அரிய படைப்புகளுக்கு காப்புரிமை கேட்காத மாமனிதர்; சிரமங்களை சுமந்து இடிதாங்கியை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின்: நாடு, இனம், மொழி கடந்து அறிவது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் , ”சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு நாள் நல்வாழ்த்துகள். நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த மாபெரும் ஆயுதம் – அதுவே நமது குரல், நமது உரிமைகளுக்கான பாதுகாப்புக் கேடயம். சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாக மட்டுமே வலுப்பெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதியான அடித்தளம் மீதுதான் நமது குடியரசு நிலைப்பெற்றுள்ளது. அரசியலமைப்பைப் பாதுகாப்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும். இது நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த்! ஜெய் அரசியலமைப்பு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று அனுசரிக்கப்படும் குடியரசு தினம், 1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை நினைவுகூர்கிறது. இது நாடு ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயகக் குடியரசாக மாறியதைக் குறிக்கிறது. கார்கே நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்,
மேலும் “ஜெய் ஹிந்த்” என்று கூறி தனது செய்தியை முடித்தார்.
முன்னதாக வாக்காளர் தினத்தையொட்டி, வெளியிட்டுள்ள பதிவில், சமீப காலங்களில், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் தொடர்ச்சியான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன என்றும், எனவே ஜனநாயகம் வெறும் உயிர்வாழ்வது மட்டுமல்லாமல், உண்மையாக செழித்து வளர, அவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது “நமது பொறுப்பு” என்றும், “வாக்குத் திருட்டு” மற்றும் திட்டமிடப்படாத சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலம் “வாக்களிக்கும் உரிமையைப்” பறிப்பது, இந்தியாவின் நீண்டகாலமாகப் போற்றப்படும் ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கிறது என்று அவர் கூறினார்.
[youtube-feed feed=1]