இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இடுக்கி மாவட்டம்  தொடுபுழா அருகே உள்ள கஞ்சார் மலைக் கிராமத்தில் (குடையத்தூர் பகுதி) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்சி  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டு சோமன் என்பவரின் வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது. நிலச்சரிவில் சிக்கி சோமனின் தாய் தங்கம்மா, மகன் தேவானந்த் உள்பட 5 பேரின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மழை மேலும்,  நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.