யோத்தி

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி நகரில் 25 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\

கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், ‘தீபோத்ஸவ்’ எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் அந்த ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ,

இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கு அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரயு நதிக்கரையில் உள்ள 55 படித்துறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.

இந்தாண்டு தீபத் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாகவும், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.