ஞ்சாவூர்

லங்கைக்கு கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இலங்கை மட்டக்களப்பு பகுதியில் உள்ள கோவிலுக்காக 22 ஐம்பொன் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வருடங்களாக சுமார் 30 லட்சம் ருபாய் மதிப்புள்ள இந்த சிலைகளை டங்களாக சுமார் 25 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கும்பகோணம் அருகில் திம்மக்குடியில் உள்ள வரதராஜன் ஸ்தபதி குழுவினர், இலங்கையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு தேவையான சிலைகள் செய்ய அனுமதி பெற்று சிவலிங்கம், நடராஜர், உள்ளிட்ட 28 பஞ்சலோக உற்சவர் சிலைகளையும், கோவில் மணிகள் மற்றும் கோபுர கலசங்களையும் தயாரித்துள்ளனர்.

இந்த ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.