roja
ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகை ரோஜா ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நடிகை ரோஜா ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு தனி நீதிபதி விசாரித்து சஸ்பெண்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதையடுத்து ரோஜா சட்டசபைக்கு செல்ல முயன்றார். ஆனால் சபை காவலர்கள் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஐகோர்ட்டு பெஞ்ச் ரோஜாவுக்கு சட்டசபை விதித்த சஸ்பெண்டு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை ரோஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளார். அதில் ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுபடி தன்னை சபைக்குள் அனுமதித்து இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் என்னை சபை வாசலில் தடுத்து விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரோஜாவின் அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு நேரம் முடிந்ததால் திங்கட்கிழமை (4–ந்தேதி), விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் கோபால்கவுடா, அருண்மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் இதனை விசாரிக்கிறது.