ubramanian-swamy
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை விடுதலை செய்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞரின் வாதம் இன்று 9வது நாள் விசாரணையுடன் நிறைவடைந்ததது. இதையடுத்து வழக்கில் மனுதாரர் என்ற முறையில் சேர்க்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது வாதத்தை தொடங்கினார்.