பெங்களூரு:

ர்நாடக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம் என்று  கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறி உள்ளார்.

பா.ஜனதா மேலிடம், கர்நாடக கூட்டணி ஆட்சியை  கவிழ்க்க முயற்சி செய்யக்கூடாது என உத்தர விட்டுள்ளதால், மாநில அரசை  கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம் என்று கூறியவர், ஒருவேளை இந்த அரசு தானாக  கவிழ்ந்தால்,  அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதானந்தா கவுடா உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா,  கர்நாடகாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஜேடிஎஸ்  கூட்டணி அரசு வறட்சி நிவாரண பணிகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வர  நாங்கள் ஆசைப்படவில்லை என்று கூறியவர், சட்ட சபையை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா கூறியது சரியல்ல.

எங்கள் கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தில் இருந்து 4 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் எங்களுக்கு திருப்தியை தருகிறது. அவர்கள் சிறப்பான முறையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

மேலும், கர்நாடக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யக்கூடாது என பாஜக மேலிடம்  உத்தர விட்டுள்ளதால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம் என்றும்,  இந்த அரசு தானாக  கவிழ்ந்தால்,  அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.