சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சகோதரி ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் 2008ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது.

இருவருக்கும் ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. எனினும் இருவரும் சரணடையவில்லை. இதையடுத்து இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.