சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்,  ஓபிஎஸ், இளவரசி விசாரணைக்கு வர சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று நேரில் ஆஜர் ஆகினர். அவர்களிடம் ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

இளவரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது,  பதில் அளித்து பேசிய இளவரசி, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என வாக்குமூலம் அளித்தார். அதாவது மருத்துவமனையில் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று கூறியவர், அவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் சசிகலா தான் ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்துக் கொண்டதாகவும், என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் சசிகலாவுக்கு தான் தெரியும் எனவும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்த போது, அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தன்னிடம் பகிர்ந்து கொண்ட தில்லை எனவும் இளவரசி தெரிவித்துள்ளார். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா  சிறைக்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார் என்றும் கூறி உள்ளார்.