திரிபுரா:

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வெளியிட்டார்.

இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு கடந்த ஜன.21-ல் வேட்புமனு துவங்கி, வேட்பு மனு தாககல் ஜன.31-ல் முடிவடைந்தது. 28 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர்.

இந்நிலையில், திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.