சென்னை,

150 ஆண்டுகளுக்குபின் வரும் அபூர்வ சந்திர கிரகணத்தை காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சந்திர கிரகணத்தை  காண்பதற்காக 5 தொலைநோக்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ., பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும்.

அப்போது, ‘சூப்பர் மூன்’ உருவாகிறது. அது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.

வரலாற்றில் சிறப்புமிக்கதாக  152 ஆண்டுகளுக்கு பிறகு அன்று அரிய சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இன்றை கிரகணத்தை  வெறும் கண்களால் பார்க்கலாம்’ என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

சூரியன் – பூமி – நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.

இது குறித்து, தமிழக அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் கூறும்போது,

ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நிகழ்வு  அபூர்வமாக ஏற்படுவதால்   ‘புளு மூன்’ என அழைக்கிறோம். ஆனால், அதற்காக நிலா நீலக்கலரில் தெரியாது. சாதாரணமாகத்தான் இருக்கும். விண்வெளியில் உலவும் மாசுக்களை பொறுத்து அதன் நிறம் மாற வாய்ப்பு உண்டு.

அதன் காரணமாக  இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்பட வாய்ப்பு உள்ளது.  இந்த அபூர்வ சந்திரகிரஹணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடைபெறுவதால் வரலாற்று புகழ் பெற்றுள்ளது.

இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும்.

‘இந்தியாவில் இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. சென்னையில் மாலை 6:05 மணிக்கு சந்திரன் உதயமாகும். லை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது படிப்படியாக  இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக தொடங்கி,  8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு, 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

இன்றைய சந்திர கிரகணத்தை  பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல், வெறும் கண்களாலும்  பார்க்கலாம்.

இன்று நடக்கும் சந்திர கிரஹணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.