மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு இன்று வந்து ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமழகம் முழுதும் இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.இந்த போராட்டம் காரணமா,  தமிழக அரசே அவசர சட்டத்தை அமல் படுத்தி ஜல்லிக்கட்டை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.  நிரந்தர தீர்வுக்கும் இதுவே வழி என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். மேலும், தானே அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை துவக்கிவைப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தமிழகம் முழுதும் போராடும் இளைஞர்கள், அவசர சட்டம் என்பது தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வு வரும் வரை போராடுவோம் என்று அறிவித்து போாரடி வருகிறார்கள்.

அலங்காநல்லூரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தைத் தொடர்ந்துவருகிறார்கள். இதனால் இன்று அங்கு வருவதாக இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தன் பயணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.