சென்னை :

மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக  (ஜூலை 31ந்தேதி வரை)  6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.19.35 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இது ஜூலை 31ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில்  7 கட்டமாக ஊரடங்கு ஆகஸ்டு 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக,  6,60,011வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  9,24,933 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,40,744 வழக்குகள் செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 19 கோடியே 35லட்சத்து 10ஆயிரத்த 078 ரூபாய் அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று (ஜூலை 31–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை போலீசார் நடத்திய சோதனையில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இது தொடர்புடைய 6 இரு சக்கர வாகனங்கள், 1 ஆட்டோ என மொத்தம் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.