சென்னை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி (வயது 46) மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ வெளியானதை தொடர்ந்து இன்று கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருப்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.