சென்னை: தமிழகம் வழியாக செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 48 பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்றும், கடந்த ஆண்டு (2022)ல் மட்டும்,  12,032 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய நெடுஞ்சாலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் தற்காலிக தரவுகளின்படி, 2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தமிழ்நாடு வழியாகச் செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளால் 12,032 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் 1,045 இறப்புகளுடன் முதலிடத்திலும், செங்கல்பட்டு (929), திருப்பூர் (877), சேலம் (827), மதுரை (788) ஆகியவை  அடுத்தடுத்த இடங்களில்  இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் தற்காலிக தரவுகளின்படி, 2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தமிழ்நாடு வழியாகச் செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளால் 12,032 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ம் ஆண்டு 10,373  ஆக இருந்த நிலையில், தற்போது கடுமையாக அதிரித்து, அதிகரிப்பு 17,473 இறப்புகள் சாலை விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 68% அதிகம் ஆகும். நெடுஞ்சாலைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகமாக உள்ளது

தமிழ்நாட்டில் உள்ள சாலை நெட்வொர்க்கில் (பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம சாலைகள் தவிர்த்து) மாநில நெடுஞ்சாலைகளின் பங்கு 15.9% (11,279 கிமீ) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 9.3% (6,606 கிமீ) ஆகும். கடந்த ஆண்டு 17,473 பேர் இறந்த நிலையில், 2017 மற்றும் 2022 க்கு இடையில் சாலை விபத்துக்கள் TN இல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் கொன்றுள்ளன மற்றும் 1.5 லட்சம் பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.  அதே வேளையில், கணிசமான எண்ணிக்கையிலான விபத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களிடையே தற்காலிக அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஒரு நாளைக்கு சராசரியான இறப்பு எண்ணிக்கை 48 ஆக உள்ளது.

இதுகுறித்து கூறிய நிபுணர்கள்,  பயனற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நெடுஞ்சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன, இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான சட்ட  திருத்தத்திற்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் 14,527 பேர் கொல்லப்பட்டதாகக் கண்டறியப்பட்டது,  2021 ஆம் ஆண்டில் 15,384 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் விபத்துகளின் போக்கு, 2017 முதல் நெடுஞ்சாலைகள், காவல்துறை, போக்குவரத்து மற்றும் பிற துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள  பள்ளங்கள், மோசமான வடிவமைப்பு மற்றும் பராமரிப்பின்மை ஆகியவை நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான விபத்து இறப்புகளுக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் விரைவான நகரமயமாக்கலின் அறிகுறி மட்டுமே. நெடுஞ்சாலைகளில் முன்பை விட தற்போது அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும், ”என்று மாநில சாலை பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும் ஒரு அதிகாரி கூறினார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: “மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுப்பதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது, விரைவில் நிதி வழங்குவதற்கான அரசாணை எதிர்பார்க்கப்படுகிறது. காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க கலெக்டர்கள் தலைமையிலான மாவட்ட சாலை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளப்படும்,” என்றார்.

இருப்பினும், இளைஞர்கள் பொறுப்பற்ற ‘இரு சக்கர வாகனம்’ ஓட்டுவது பெரும் சவாலாக உள்ளது. “நெடுஞ்சாலைகளில் ஸ்டண்ட் செய்யும் போது பைக்கு களில் இருந்து விழுந்து அல்லது மீடியன்களில் அடிபட்டு ஏராளமான பைக் ஓட்டுநர்கள் இறந்துள்ளனர். கல்லூரி அளவில் சாலைப் பாதுகாப்புக் குழு விரைவில் அமைக்கப்படும்” என்று அதிகாரி ஒருவர் விளக்கினார்.

இதற்கிடையில், கோவை மாவட்டத்தில் 2022ம் ஆண்டு 1,045 இறப்புகளுடன் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு (929), திருப்பூர் (877), சேலம் (827) மற்றும் மதுரை (788) உள்ளன.

இரு சக்கர வாகனங்களில் 7,392 இறப்புகள் அல்லது 42% இறப்புகள், கார்/ஜீப் 17% (2,727), டிரக்குகள் 13% (2,210) மற்றும் வேன்/டெம்போ 8% (1,424) ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்துகளில் 3% (545) மற்றும் அரசுப் பேருந்து களில் 5% (853) பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ ரிக்‌ஷாக்கள் விபத்துக்களில் சிக்கி 403 உயிர்களைக் கொன்றது, மற்ற வாகனங்களால் 1,719 (10%) இறப்புகள் நிகழ்ந்தன.

நெடுஞ்சாலைகளில் அதிக பைக்குகள் விபத்துக்கு ஒள்ளாகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பு மாற்றி யமைக்கப்பட வேண்டும், ”என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 4,893 இறப்புகள் நடைபெற்றுள்ளன. இது மொத்த இறப்புகளில் 28 சதவிகிதம். மாநிலங்களில் உள்ள தேசியநெடுஞ்சாலைகளில் 952 இறப்புகள் எற்பட்டுள்ளன. இது மொத்த இறப்புகளில் 5 சதவிகிதம். மாநில நெடுஞ்சாலைகளில் 6,187 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இது மொத்த இறப்புகளில் 35 சதவிகிதம் ஆகும்.

விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு இல்லாததே சாலை விபத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் என நிபுணர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும்  தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தில், பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து விடலாம்.  பல நாடுகளில் இதுபோன்ற சமூக பார்வையுடனான கல்வி போதிக்கப்படுவதால், அங்கெல்லாம் சாலை விபத்துக்குள் வெகு குறைவாகவே உள்ளது. ஆனால், நமது நாட்டில் அதுகுறித்த ஒரு விழிப்புணர்வு இல்லை என்பதே சாலை விபத்துக்கள் அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. இதற்கான அடிப்படை கல்வி அமைப்பு இல்லாதது வேதனையானது.

அதுபோல தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதை தடுக்க குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான பாடத்திட்டங்களை கொண்டு வருவதை  தவிர மற்ற அனைத்து விதமான பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகின்றன,

தமிழனை மற்ற மாநிலங்களோடு போட்டியிட முடியாத, தன்னம்பிக்கையற்றவனாக மாற்றுவதிலேயே தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகளின் ஆட்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழனை  தன்னம்பிக்கை உடையவனாகவும், பாதுகாப்பான வாழ்க்கை பேணவும், எதையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்குவதை விட்டுவிட்டு,   இலவசங்களும், டாஸ்மாக்குகளும், போதைபொருட்கள் நடமாட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டி, மாணவ பருவத்திலேயே தன்னம்பிக்கையற்ற தமிழனகவும், குடிகாரனமாகவும் மாற்றி வருகின்றன இன்றைய மத்திய, மாநில அரசுகள்…

உலகத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதுபோல போட்டிகளை எதிர்கொள்ளாமலும் வாழ முடியாது. அப்படி இருக்கும்போது, அதற்கான அடித்தளத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதே இன்றைய தலையாய கடமை. அதை முன்னெடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.