டெல்லி: மாநில ஹஜ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ‘ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி, ஹஜ் கமிட்டி அமைப்பதிலும், அதற்கான நிதியை பயன்படுத்துவதிலும் சில மாநில அரசுகளும், மத்திய அரசும் முறையாக செயல்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்’ என குறிப்பிட்டிருந்ததார்.

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் நசீர், மகேஸ்வரி அமர்வு, ‘ஹஜ் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதா? மாநில ஹஜ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்pதயது. மேலும், மாநில ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் யார்  யார்  என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் 2 வாரத்திற்குள்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய  வெளியுறவு அமைச்சகம், இந்திய ஹஜ் கமிட்டி உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.