கோவை: கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கோவையில் அடுத்தடுத்த 2 கொலைகள் நடைபெற்றது. கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் பேசி விமர்சனம் செய்தனர். இதையடுத்து, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததார்.

இதையடுத்து, கோவை காவல்துறையினல் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். தனிப்படை போலீஸ் போலீஸ் அமைப்பு ரவுடிகளை வேட்டையாடினர். மேலும், சிறப்பு வாகன சோரன, விடுதி தணிக்கையில் ஈடுபட்டனர்.  சந்தேகத்துக்கிடமானோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.  அதன்படி கடந்த இரு நாளில் மட்டும்  35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர் என மாவட்ட காவல் கண்காளிப்பாளர் தெரிவித்துள்ளார்,.