1srividya
2015ம் ஆண்டு, நவம்பர் 13ந்தேதி  தீபாவளியன்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட  கமல், ஸ்ரீவித்யா எனது காதலிதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 
1975 ஆம் ஆண்டு வெளிவந்த, கமல்- ரஜினி நடித்த  தமிழ்த் திரைப்படம் ‘அபூர்வ ராகங்கள்’ .
1976ம் ஆண்டு தேசிய திரைப்பட விருது பெற்ற இந்த படம்,  கே.பாலசந்திரின் 12வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா போன்ற பலர் நடித்துள்ளனர்.

ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்  கண்ணதாசனின் வரிகளில், எம்.எஸ்.வியின் இசையில், வாணி ஜெயராம் பாடிய என்றும் மறக்க முடியாத பாடல் இடம் பெற்ற திரைப்படம்.  தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ‘அபூர்வ ராகங்கள்’.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அச்சாரம் போட்ட முதல் படமும் இதுதான். இந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவும், கமலஹாசனும் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த கால கட்டத்தில் இருவரும் ஏறத்தாழ ஒத்த வயதினர்களாக இருந்தாலும், இந்த படத்தில் ஸ்ரீவித்யா பள்ளி செல்லும் இளம்பெண்ணுக்கு தாயாக, நடுத்தர வயது உடையவராக நடித்திருந்தார்.
அவரை காதலிக்கும் இளைஞனாக கமல் நடித்திருந்தார். இந்த படத்தில் இருவரின் நடிப்பும், நடிப்பாக இல்லாமல், அவர்களது சொந்த காதலாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது…  அதுபோலவே சினிமா தொழிற்துறையிலும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், இதுபோன்ற கிசுகிசுக்கள் பற்றி இருவரும் கவலைப்படவில்லை… அதற்கு பதிலும் தெரிவிக்கவில்லை.
kamal2
சில காலங்களில்  ஸ்ரீவித்யாவுக்கு, மற்றொருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அந்த மண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட விவாகரத்து பெற்றார் ஸ்ரீவித்யா. அவருக்கு குழந்தைகள் கிடையாது.
அதன்பிறகு தனி மரமாக வாழ்க்கையை ஓட்டி வந்தார். ஏராளமான படங்களில் நடித்து வந்த ஸ்ரீவித்யா உடல் நலம் இல்லாமல் பாதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக கேரளாவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவித்யா, தனது 53வது வயதில் 2006ம் ஆண்டில் மரணத்தை தழுவினார்.
kaml-rajuni
ஸ்ரீவித்யாவின் மரணத்துக்கு பிறகே, கமல் தனது காதலி ஸ்ரீவித்யா என்பதை ஒத்துக்கொண்டார்.
தொலைக்காட்சி நேர்காணலின்போது, ஸ்ரீவித்யா தனது காதலிதான் என ஒப்புக் கொண்ட கமல், ஸ்ரீவித்யாவுடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், கமலிடம் சில புகைப்படங்க ளைக் காட்டி, அதுகுறித்து அவரது கருத்தை தெரி விக்க வலியுறுத்தினார்.
அந்த புகைப்படங்களில் அபூர்வ ராகங்கள் படத்தில் கமலும் ஸ்ரீவித்யாவும் தோன்றிய காட்சி இடம் பெற்றிருந்தது.
அந்தப் புகைப்படம் குறித்து, கமல்,  ஸ்ரீவித்யாவை தனது காதலி என்று ஒப்புக்கொண்டார்.
“இதில் ஒளிவுமறைவெல்லாம் ஒன்றுமில்லை. எங்களுக்கிடையில் காதல் கடைசிவரையில் இருந்தது. ஆனால் அது கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற அவசியம் இருந்ததில்லை” என்று கூறினார்.
பல ஆண்டுகளாக இதுகுறித்து கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில், அவர் மறைவுக்கு பிறகு கமல் ஒப்புக்கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியது.
sridevi
அதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி குறித்து கேட்டபோது, அதற்கு பதில் தெரிவித்த கமல், , “எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் ஏதோ இருந்ததாக பலர் கூறி இருக்கின்றார்கள் – எழுதியிருக்கின்றார்கள்.
ஆனால், அவர் எனக்குப் பள்ளித் தோழி மாதிரிதான். அவர் தலையில் எல்லாம் குட்டியிருக்கின்றேன். இன்றைக்கும் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி கொஞ்சம் பயத்தோடு தள்ளியிருந்துதான் பேசுவார் என்றார்.
“ஸ்ரீவித்யாவிடம் இருந்த உறவு எனக்கு ஸ்ரீதேவியிடம் இருந்ததில்லை”. ஆனாலும் பலரும் நம்ப மாட்டார்கள். அதுதான் சினிமா என்றார்.