சென்னை: வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்த நிலையில் ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 வடசென்னை பகுதியில் ரூ. 10 கோடியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம், நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்திருந்தார்.  இதைத் தொடா்ந்து, தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டு வளாகம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.  அதன்படி, அந்தப் பகுதியில் சிறந்த விளையாட்டு வசதிகள், கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு விளையாட்டு வளாகம் அமைக்க நிா்வாக அனுமதியும், இதற்கான செலவினமாக ரூ. 9.70 கோடியை மானியமாக வழங்கியும் செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கு,  வாலிபால், பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, ஜிம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது.