சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு.

இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’  படத்தின் படபிடிப்புத் தளத்திற்கு  வருகை தந்து, ஒட்டு மொத்த படக் குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘கிளாப் போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’.

நடிகரும், தயாரிப்பாளருமான வி.சத்யமூர்த்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன், ‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’  படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.

இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’  படத்தை, அறிமுக இயக்குநரான ‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

“சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும்   பெரும் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு,  எங்களின் ‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’  படக் குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளரும்,  நடிகருமான  வி.சத்யமூர்த்தி.hare this: