சாத்தான்குளம்: தனியார்  கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பகுதி பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்உடைக்கும் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது.  இங்கு சென்ற பாஜக நிர்வாகி பூபதி தலைமையிலான சிலர், கட்சிக்கு நன்கொடை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால், ஆலையை நிர்வகித்து வந்த மேலாளர், முதலாளி ஊரில் இல்லை என்பதால், அவர் வந்ததும் கேட்டுச்சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அதை ஏற்க  மறுத்த பூபதி ராஜா உள்ளிட்டோர் அவரிடம் தகராறு செய்து, அவதூறாக பேசியதுடன்,  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர்,  பாஜக இளைஞரணி பொறுப்பாளர் பூபதி ராஜாவை  கைது செய்தனர்.