மும்பை:
கில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்.

அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

2009 ஆம் ஆண்டில் சரோஜுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது.அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ், ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார். புதுதில்லியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒளிபரப்புத் துறைக்கு பங்களித்து வந்தார்.தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள் மற்றும் செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுப்பதைத் தவிர, தமிழ்த் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் மற்றும் ஸ்பாட்டிங் (ஆங்கிலத்தில்) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.