சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமர்கிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை. சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

சனி பகவானுக்கான பரிகாரங்கள் (பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

கடகம்

புனர்பூசம்,4: திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீங்க. அயல்நாடு சென்று வருவீங்க. அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் லேசாக பாதிக்கப்படக்கூடும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்வது நல்லது.

பூசம்: வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. ரோகிணி நற்பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் லாபமும் நன்மையும் சந்தோஷமும் கூடுதலாகும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கணுங்க.

ஆயில்யம்: முதல் வருடத்தில் மட்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத யோகம் உண்டு. சிலருக்குப் புதையல் கூடக் கிடைக்கும். (அல்லது அதற்குச் சமமான விஷயங்கள் கிடைக்கும்.) எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படாமல் கவனமாக இருங்கள். சிலர், வேலை விஷயமாக மனைவியைப் பிரிந்து வெளிமாநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ செல்வீங்க. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

சிம்மம்

மகம்: இளைஞர்களுக்குத் தடைகள் அனைத்தும் விலகி மேன்மையான நல்ல பலன்கள் நடக்கும். இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்க தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும். இதுவரை தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை இனி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்கணுங்க.

பூரம்: எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம்  உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வாங்க. ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீங்க.

உத்திரம்,1: சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீங்க. எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்.அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. அல்லது தொல்லைகள் முன்பைவிட மிகவும் குறையும். மேலதிகாரிகள் உதவி செய்வாங்க. உங்களின் பணியாள்களும் ஒத்துழைப்பு தருவாங்க. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். இளம் வயதினர் விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக்குங்க.

கன்னி

உத்திரம்,2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.  உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கிடுங்க. இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். அருமையான உழைப்பின் காரணமாகப் பணவரவு அதிகரிக்கும்

அஸ்தம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவாங்க. உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும்.

சித்திரை, 1,2: தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீங்க., பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீங்க. மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

நாளை துலாம், விருச்சிகம், தனுசு  ராசிகளுக்கான பலன்கள்