வேலுர்: திமுக ஆட்சி பதவி ஏற்ற பிறகு இதுவரை கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி சொத்துக்கள்  மீட்கப்பட்ட உள்ளதாக அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோவிலில் புணரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள்  ரூ.7 கோடி செலவில் புணரமைக்கப்படும் என்றவர்,. இந்த கோவில் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் தொன்மை மாறாமல் புனரமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்த இடத்தில் வசித்து வந்த 53 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிட அமைச்சர் காந்தி ஏற்பாடுகளை செய்துள்ளார். என்றவர், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்திடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு இது வரையில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

அமைச்சர் சேகர்பாபுவுடன்,  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.