விழுப்புரம்:  விழுப்புரத்தில் அரசு அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், போதைப்பொருள் கொடுத்து, வயதானவர்களை மனநலம் பாதிக்கச் செய்து மதமாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, குரங்குகளை வைத்து அச்சுறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 15 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனையடுத்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற இக்குழுவினர் அங்கு அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். பின்னர், ஆசிரமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில அறைகளை மட்டும் மூடி சீல் வைக்க தேசிய குழந்தைகள் நல ஆணைய குழு உத்தரவிட்டது.

இதனையடுத்து ஆசிரம கட்டிடத்தில் உள்ள ஆசிரம நிர்வாகி பயன்படுத்தி வந்த அறை மற்றும் மனநலம் குன்றியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறை என 2 அறைகள் மூடப்பட்டு தேசிய குழந்தைகள் நல ஆணைய குழுவினர் மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த ஆசிரம கட்டிடத்தில் 60 பேர் தங்க வைத்து பராமரிக்க மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் 140-க்கும் மேற்பட்டோரை இந்த கட்டிடத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செயற்கையான முறையில் போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை எங்கிருந்து வாங்கினார்கள் என விசாரிக்க சொல்லியுள்ளோம். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் எங்களிடம் வாங்கினார்களா என 15 நாட்களுக்குள் அறிக்கை தருகிறோம் என்று சொல்லியுள்ளார். மேலும், இரவு நேரங்களில் ஜெபம் செய்து மதமாற்றம் வேலை நடந்துள்ளது. இங்கு சேர்க்கப்பட்டிருந்த குழந்தையின் தாய் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

டார்க் ரூம் எனப்படும் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று உடல்நிலை சரியில்லாதவர்களை சரியாகிவிடும் என்று கூறி மத மாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். காப்பகத்தில் காணாமல்போன 15 பேர் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 2 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் விசாரணைக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பிப்பதாக கூறியுள்ளனர்.