மும்பை: டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.  அதன்படி, இணையதளம் வாயிலாக டின் வழங்கும்  நிறுவனங்களுக்கான, முதல் கட்ட விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, தற்போது பல நிறுவனங்கள்  டிஜிட்டல் மூலம் ஆவணங்களை பெற்று கடன் வழங்கி வருகிறது. இதில் பல முறைகேடுகளும் எழுந்துள்ளன. லோன் சம்பந்தமாக செல்போன் செயலிகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக, டிஜிட்டல் முறையில் பல நிறுவனங்கள் கடன் வழங்கி வருவதில் ஏராளமான முறைகேடு புகார்கள்  அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  டிஜிட்டல் கடன் முறைகள் மூலம் கடன் வழங்குவதில் இருந்து எழும் கவலைகளைத் தணிக்கும் முயற்சியில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை அத்தகைய நடவடிக்கைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் வங்கி கூட்டத்தில் பேசும்போது, “ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்பட வேண்டும். அதற்கு மேல் அவர்கள் ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு ஆர்.பி.ஐ., அனுமதியைப் பெற வேண்டும். உரிமம் இல்லாத செயல்களில் ஈடுபட்டால் அதை ஏற்க முடியாது. விதிமீறல்களை அனுமதிக்க முடியாது.” என திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளுக்கான விதிகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அனைத்து கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.

கடன் சேவை வழங்குநர் அல்லது மூன்றாம் தரப்பினர் கணக்குகளின் வழியாக இவை செயல்படுத்தக் கூடாது.

டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணங்களாக இருந்தாலும் அவை நேரடியாக வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்குட்ப்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். கடன் வாங்கியவர் செலுத்த தேவையில்லை.

கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முன் முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையை (Key Fact Statement) கடன் பெறுபவரிடம் வழங்க வேண்டும்.

வருடாந்திர சதவீத விகிதம் (வட்டி) வடிவில் டிஜிட்டல் கடன்களின் அனைத்து செலவுகளையும் கடன் பெறுபவருக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்தகவலை முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையிலும் இடம்பெற செய்ய வேண்டும்.

கடன் பெறுபவரின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக அதிகரிப்பது தடை செய்யப்படுகிறது.

கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் புரொபோஷனேட் வட்டியை அபராதம் இல்லாமல் செலுத்தி டிஜிட்டல் கடன்களை விட்டு வெளியேறலாம். அதற்கான கூலிங் ஆப் காலம் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.

டிஜிட்டல் கடன் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு புகார்களைக் கையாள்வதற்கு நோடல் குறை தீர்க்கும் அதிகாரி இருப்பதை வங்கிகள் அல்லது கடன் வழங்க லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

குறைதீர்வு அதிகாரியின் தொடர்பு விவரங்கள் இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் தற்போதுள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கடன் பெற்றவர்கள் அளிக்கும் எந்தவொரு புகாரும் 30 நாட்களுக்குள் நிறுவனங்களால் தீர்க்கப்பட வேண்டும்.

இல்லையெனில் ரிசர்வ் வங்கியின் – ஒருங்கிணைந்த ஆம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் தீர்வு காணலாம். இத்தகைய புதிய விதிகள் மூலம் இனி ஆன்லைன் கடன் செயலிகள் கவனிக்கப்படும்.

வங்கி கட்டுப்பாட்டாளர் திட்டவட்டமாக கடன் வழங்கும் வணிகத்தை அதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் அல்லது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி டிஜிட்டல் கடன் வழங்குபவர்களின் பிரபஞ்சத்தை மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளது – ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் கடன் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்; மற்ற சட்டப்பூர்வ / ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், ஆனால் RBI ஆல் கட்டுப்படுத்தப்படவில்லை, மற்றும் எந்தவொரு சட்டப்பூர்வ / ஒழுங்குமுறை விதிகளின் வரம்பிற்கு வெளியே கடன் வழங்கும் நிறுவனங்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான இடத்தை ஒதுக்குகிறது ரிசர்வ் வங்கி அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட பிற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் கடன் வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

கடன் கொடுப்பது அல்லது வசூலிப்பது போன்ற அனைத்தும் மூன்றாம் நபர் அமைப்புகள் வாயிலாக அல்லாமல், வங்கி கணக்கு வாயிலாகவே மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2021 ஜனவரியில் இவ்விவகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழுவை ரிசர்வ் வங்கி அமைத்தது. இக்குழுவானது, கடந்த நவம்பரில் தனது ஆலோசனைகளை வழங்கியது. இவற்றில் தெரிவிக்கப்பட்ட பல ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டிருக்கிறது. சில ஆலோசனைகள், கொள்கை அளவில் ஏற்கப்பட்டு உள்ளன. சில ஆலோசனைகள், தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துமா என்பது குறித்தும் ஆராயப்பட உள்ளன. இவற்றில் இருக்கும் போதாமைகள் சரி செய்யப்பட்ட பிறகு, முழுமையான விதிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.