கொரோனா ஊரடங்கில் திரைத்துறையினர் சமூகவலைத்தளங்களில் பொழுதை கழித்து வருகின்றனர் .
திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு அதுகுறித்து நினைவுகளை பகிர்ந்து வந்தனர் .
அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளையகாப்பு போட்டோவை ஷேர் செய்துள்ளார் .தனது பெரியம்மாக்கள் தனக்கு வளையல் போட்டுவிடும் போட்டோக்களையும் மற்றொன்றில் தனது அம்மா தன்னுடைய வளையகாப்பை கேமராவில் படம் பிடிப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த போட்டோக்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. தற்போது நாஸ்டல்ஜிக் என அவற்றை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.