டெல்லி: வருகின்ற 17, 18 தேதிகளில் சென்னை உள்பட வடகலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.6 கிலோமீட்டர் உயரம்) காரணமாக வரும் இன்றுமுதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அண்டை பகுதியில் அமைந்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நன்கு பதிவாகும்.

இந்த சூறாவளி சுழற்சியானது கர்நாடகா-வடக்கு கேரளா கடற்கரையில் கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ளது. அதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வட தமிழ்நாடு வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை  நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக இன்று தமிழ்நாடு – புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய வடக்கு கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தனித்தனி இடங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா மற்றும் தெற்கு கொங்கன் & கோவாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யும்.

அதன்பிறகு, அது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 18 நவம்பர் 2021 அன்று தெற்கு ஆந்திரப் பிரதேசம்-வடக்கு தமிழ்நாடு கடற்கரையில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்.

இன்று  ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் – புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (16ந்தேதி) தமிழ்நாடு – புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை (நவம்பர் 16) அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் முதல், (17, 18ந்தேதி)  தமிழ்நாடு – புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் – புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 19ந்தேதி அன்று, தமிழ்நாடு – புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் – புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாட்டை நெருங்கும் என்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். மேலும் வருகின்ற 17, 18 தேதிகளில் சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை இதுவரை 44 செ.மீ. பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பு 28 செ.மீ. இயல்பைவிட 54 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.