புதுடெல்லி:
பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மூன்றாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மற்றும் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒற்றை கட்ட வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.