டெல்லி:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்.

புத்தாண்டு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் முன் டுவிட்டரில்… அடுத்த சில நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன்….அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துகொண்டு ராகுல் காந்தி டெல்லி வந்தார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கட்சியினர் தேர்தல் பிரிவு நிர்வாகிகளை ராகுல் சந்தித்தார். இந்த சந்திப்பில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.