டில்லி:

வரும் ஜீன் 3ம் தேதி,  தி.மு.க. தலைவர்  கருணாநிதியின் வைரவிழா சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் திமு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி  கலந்துகொள்ள இருப்பதாக அக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், ராகுலின் வருகை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.