ஜகார்தா:
ந்தோனோஷியாவில் இன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.7-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.