புதுச்சேரி: திமுக எம்.பி. ராஜாவின் இந்துவிரோத பேச்சை கண்டித்து இன்று புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற தமிழக பேருந்துகள் மீது கல்வீசு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, பேருந்து போக்கு வரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

திமுக எம்பி ஆ.ராசா இந்துமதம் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானது. அவர்மீது இதுவரை தமிழகஅரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதுச்சேரியில், இன்று ஒருநாள்  அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

துச்சேரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டது.  இதைக்கண்ட போராட்டக்காரர்கள்,  வில்லியனூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது. இதனால் பேருந்தின் முகப்பு கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் வழித்தடங்களில் செல்லும் செல்லும் தமிழக, புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.