டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக  ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனையும், எம்.பி.யுமான கேரளாவைச் சேர்ந்த பி.பி.உஷா  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு முதன்முதறையாக பெண் ஒருவர் தலைமை பொறுப்பு வரும் வாய்ப்பை பெற்று, இந்திய ஒலிம்பிக் சங்க சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஓப்பந்தய வீராங்கனை பிடி உஷா. இவர் ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  தற்போது 58 வயதாகும் பிடி உஷா கடந்த ஜூலை மாதம் மத்தியஅரசால் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு, பதவி ஏற்றார். தற்போது எம்.பி.யாக உள்ளாளர்.

இதற்கிடையில்,. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 10ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 25ந்தேதி முதல் 27ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனு வாபஸ் பெற டிசம்பர் 1ந்தேதி முதல் 3ந்தேதி வரை என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார்.  சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து  பிடி உஷா எம்.பி. 27ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆனால், மற்ற பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  அதன்படி, ணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.  இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.