சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு உரிய முறையிலான  இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள், அவர்கள் உயிரிழக்கும்போது கொரோனா  நெகடிவ் என சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, கரோனா காரணமாக உயிரிழந்ததைக் குறிப்பிட்டு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு, உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், அது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளைப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு ‘நெகடிவ்’ சான்றிதழ் வழங்கும் அரசு! அமைச்சர் மா.சு. சொல்வது என்ன?