சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறையில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில், தற்போது ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு  சட்டப்பேரவையில், நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வணிகவரித்தறை உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், தற்போத  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

வணிகவரித்துறை உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றி வந்தவர்கள்  துணை வணி வரிக அலுவலர்களாக தரம் உயர்த்தப்படுகின்றனர்.

பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ளவர்களுக்கு வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்த்தப்படும் 1,000 பேரில் 160 பேர் வணிகவரி அலுவலர்களாகவும், 840 பேர் துணை வணிகவரி அலுவலர்களாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. ப

தவி உயர்வு அளிக்கப்படுவதன் காரணமாக 1,000 பெருகும் ஊதியம் உயர்த்தப்படுகிறது என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. வருவாயை பெருக்குவதற்காக வணிக வாரித்துறையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பதவி உயர்வு அளிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.29.92 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.