டெல்லி:  பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கு கிறார்.

மத்தியஅரசு குழந்தைகளின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில்,  பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதன்படி,  தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை, விளையாட்டு ஆகிய 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுகளைப் பெறக்கூடிய ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பதக்கத்துடன் சேர்த்து ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் விருதுக்கு தேர்வானவர்களுக்க குடியரசு தலைவர் மாளிகையில் இன்று விருது வழங்கப்படுகிறது.  அதன்படி இந்த முறை கலை மற்றும் கலாச்சார துறை யில் நான்கு குழந்தைகளுக்கும், துணிச்சலுக்காக ஒரு குழந்தைக்கும், புதுமைக்காக இரண்டு குழந்தைகளுக்கும், சமூக சேவைக்காக ஒரு குழந்தைக்கும், விளையாட்டிற்காக மூன்று குழந்தைகளுக்கும் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

சிறுவர்களுக்கு இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 23) வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து விருதுகள் பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி  நாளை (ஜனவரி 24ஆம் தேதி)   கலந்துரையாடுகிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் முன்ஜ்பரா மகேந்திர பாய் முன்னிலையில் குழந்தைகளுடன் உரையாடி அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.