சென்னை :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன்  இன்று 2வது நாளாக  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

பிப்ரவரி 21ந்தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு,  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் தில் முதல் கட்டமாக  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள கமல் கடந்த 2 நாட்களாக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அழைத்து, அந்தந்த மாவட்ட நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை செய்து வருகிறார்.

நேற்று ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய கமல் இன்று ஒரே நாளில் 27 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார்.

இன்றைய கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 25 பேர் என்ற கணக்கில் 27 மாவட்டத்துக்கும் சேர்ந்த 625 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு சுற்றுக்கும்  3 மாவட்ட நிர்வாகிகள் வீதம் அழைக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்று வருகிறது.