விஷால் நடித்து அவரது பிலிம் பேக்டரி தயாரித்துள்ள படம் ‘சக்ரா’. இப்படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. டிரெய்லரில் வரும் வசனங்கள் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முன்னோட்டம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு வீடுகளில் கொள்ளைஅடிக்கப்பட்டது தொடர்பான வசனங்களாக வரும் அவை இதுதான்.


வசனம் : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.
வசனம் : பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.
வசனம் : நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு…
வசனம் : நாயகன் : இது ஏதோ பர்ட்டிக்குலர் ஏரியாவுல, இல்ல பர்ட்டிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.
வசனம் : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு
வசனம் : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா,மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக் கான், சும்மா விட்ருவானா அவன்?
வசனம் : DFH மேனேஜர்: நீங்க போலீசா?
வசனம் : நாயகன்: மிலிடரி …! தெரியமாட்டான்.
இவ்வாறு வசனம் நீடிக்கும்போது வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா (WELCOME TO DIGITAL INDIA)என்று விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது. அவர் என்ன பேசுகிறார் என்பது படத்தில் தெரியும் என பட இயக்குனர் எம் .எஸ் .ஆனந்தன் தெரிவித்திருக்கிறார். .