சென்னை: பள்ளி மற்றும்  ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பு, பெற்றோர்கள்  தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை  சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.  என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த யுவராஜ் என்ற மாணவர்  தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களின் தலைமுடியை வெட்டி  தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியதுடன்,  தற்கொலைக்கு காரணமாக  தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி மாணவனின் தாய்  கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியை நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 45-லிருந்து சதவீதத்திலிருந்து 90-ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று நிரூபணமாவதாக கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது என்று கூறிய நிதிபதி,  மாணவர்களை ஒழுங்கு படுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும் பொழுதுதான் ஆசிரியர்களை ண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டதுடன்,  ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது என்றவர்,  இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளதுடன், மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலு பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பாக, பெற் றோர்கள்  தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.